அண்மைய செய்திகள்

recent
-

ஆபத்தான முறையில் பேருந்துகளை செலுத்திய சாரதிகள் கைது

 நேற்று (06) இரவு கண்டியிலிருந்து ஹட்டன் வரை ஒரே திசையில் 2 தனியார் பேருந்துகளை அதிவேகமாக செலுத்திய சாரதிகள் இருவரை ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு கைது செய்துள்ளது. 


இரு பேருந்துகளும் கண்டி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு சந்தர்ப்பங்களில் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தன. 

கினிகத்தேனை பகுதியில் பேருந்துகளின் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், இரு பேருந்துகளின் சாரதிகளும் ஆபத்தான முறையில் பேருந்துகளை அதிவேகமாக செலுத்துவதை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்து, ஹட்டன் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். 

இதனையடுத்து உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார், இரு பேருந்துகளையும் செலுத்திய சாரதிகளை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராக ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



ஆபத்தான முறையில் பேருந்துகளை செலுத்திய சாரதிகள் கைது Reviewed by Vijithan on September 07, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.