11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை
நாட்டின் 11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது இன்று (30) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு, குருநாகல் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மி.மீ க்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். அத்துடன் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள நிவேதனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
April 30, 2026
Rating:


No comments:
Post a Comment