15 அடி ஆழமான நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து இளைஞன் பலி
கம்பளை, தொரகல - கிதுல்பத்த பகுதியில் மிதிவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சுமார் 15 அடி ஆழமான நீர்நிலைக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் தனது உறவினர் முறையான சகோதரர் ஒருவருடன் மிதிவண்டியில் பயணித்தபோது, அதன் பிரேக் செயலிழந்தமையினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
15 அடி ஆழமான நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து இளைஞன் பலி
Reviewed by Vijithan
on
May 16, 2026
Rating:
Reviewed by Vijithan
on
May 16, 2026
Rating:


No comments:
Post a Comment