அண்மைய செய்திகள்

recent
-

பல பிரதேசங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்து என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இன்று (09) இரவு 11.30 மணி வரை இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. 

இடியுடன் கூடிய மழையின் போது அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.




பல பிரதேசங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை Reviewed by Vijithan on May 09, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.