அண்மைய செய்திகள்

recent
-

பலா பழத்தால் ஏற்பட்ட மோதல் ; மகளை இரும்புத் தடியால் தாக்கிப் படுகொலை செய்த தந்தை

 பலா பழத்தால் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து, மகளை இரும்புத் தடியால் தாக்கிப் படுகொலை செய்த தந்தை ஒருவரைக் களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர் களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவத்தில் வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த திலினி மதுஷானி எனும் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார். மகளும் தந்தையும் களுத்துறை வடக்கு பிரதேசத்தில் அருகருகே உள்ள இரு வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.



 நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு

எனினும், இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக, மகள் தனது கணவன் மற்றும் சிறு மகளுடன் வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வாடகை வீடொன்றுக்குச் சென்று வசித்து வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


தந்தை, மகள் முன்னர் வசித்த களுத்துறை வடக்கு காணியிலுள்ள பலா மரத்தில் இருந்து பழம் ஒன்றைப் பறித்துள்ளார். இது குறித்து அயலவர் ஒருவர் மகளுக்குத் தொலைபேசி ஊடாகத் தகவல் வழங்கியுள்ளார்.



அதனையடுத்து, மகள் அந்த இடத்திற்கு வந்து தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரான தந்தை வீட்டிலிருந்த இரும்புத் தடியால் மகளின் தலையில் தாக்கியுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தாக்குதலை நடத்திய பின்னர், சந்தேகநபர் தான் பயன்படுத்திய இரும்புத் தடியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 






பலா பழத்தால் ஏற்பட்ட மோதல் ; மகளை இரும்புத் தடியால் தாக்கிப் படுகொலை செய்த தந்தை Reviewed by Vijithan on May 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.