அண்மைய செய்திகள்

recent
-

ஆனையிறவில் மீண்டும் சோதனைகளை ஆரம்பித்தது இலங்கை இராணுவம்! -


ஆனையிறவில் மீண்டும் சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினர் இன்று ஆரம்பித்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் அடுத்தடுத்த வெடித்த குண்டுகளால் 321 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாக இன்று நாடாளுமன்றத்தில் பேசிய ருவான் விஜயவர்த்தன தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை, பலர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் நடத்தும் படையினர் சில இடங்களில் குண்டுகளை மீட்டு செயலிழக்கவும் செய்தனர்.
இந்நிலையில், கண்டி நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் ஆனையிறவு இராணுவ முகாமுக்கு அருகில் மறித்து சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றது.

பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளை இறக்கியும் சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், பஸ்களும் சோதனையிடப்படுகின்றன பாதுகாப்பு படையினரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ள.
இதேவேளை அவசரகாலச் சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆனையிறவில் மீண்டும் சோதனைகளை ஆரம்பித்தது இலங்கை இராணுவம்! - Reviewed by Author on April 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.