அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான்கதவு திறப்பு!

மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரை குளம் நிரம்பியதையடுத்து அதிலிருந்து நீரை வெளியேற்றும் வகையில் கட்டுக்கரை குளத்தின் வான்கதவு திறந்து விடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

கட்டுக்கரை குளத்தின் 3 கனவளவு நீர் தற்போது வெளியாகி கொண்டிருப்பதாக பொறியியலாளர் கிறிஸ்ன ரூபன் தெரிவித்தார். அதே வேளை நாளை காலை அதனது அளவு மேலும் 3 கனவளவு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.தற்போது மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரை குளத்தினை சூழவுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு மன்னார் நகர பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் சென்சேவியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி,அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை,என்பனவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான்கதவு திறப்பு! Reviewed by NEWMANNAR on February 06, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.