மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான்கதவு திறப்பு!

கட்டுக்கரை குளத்தின் 3 கனவளவு நீர் தற்போது வெளியாகி கொண்டிருப்பதாக பொறியியலாளர் கிறிஸ்ன ரூபன் தெரிவித்தார். அதே வேளை நாளை காலை அதனது அளவு மேலும் 3 கனவளவு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.தற்போது மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரை குளத்தினை சூழவுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு மன்னார் நகர பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் சென்சேவியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி,அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை,என்பனவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான்கதவு திறப்பு!
Reviewed by NEWMANNAR
on
February 06, 2011
Rating:

No comments:
Post a Comment