மன்னாரில் பயணிகள் தரிப்பிடம் மீது பஸ் மோதியதால் வயோதிபத்தாய் காயம் _
மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் இன்று பகல் 12 மணியளவில் இ.போ.ச.வுக்கு சொந்தமான பஸ் ஒன்று கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் பயணிகள் தரிப்பிடத்துடன் மோதியுள்ளது.இதன் போது அவ்விடத்தில் போக்குவரத்திற்காக காத்திருந்த வயோதிபத் தாய் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த பயணிகள் தரிப்பிடத்தின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
இதேவேளை பயணிகள் தரிப்பிடத்தில் போக்குவரத்திற்காக காத்திருந்த பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் பஸ் மோதியதும் அவ்விடத்தை விட்டு உடன் வெளியேறியதால் வேறெவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் பயணிகள் தரிப்பிடம் மீது பஸ் மோதியதால் வயோதிபத்தாய் காயம் _
Reviewed by NEWMANNAR
on
April 07, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 07, 2011
Rating:

No comments:
Post a Comment