அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க முடியாது _

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றம் மட்டுமல்ல, சிங்களப்பிரதேச பிரிவுகளும் அமைக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 



அரசாங்கம் எம்முடன் பேச்சுக்களை முன்னெடுக்கும் அதேவேளை, சில நகர்வுகளையும்,முன்னெடுத்துச் செல்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் அரசின் நேர்மையற்ற தன்மையினை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. சிங்களக் குடியேற்றம், நில அபகரிப்பு ஆகியவற்றைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆராயவுள்ளது.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க முடியாது எனவும், அரசு திட்டமிட்டு இன ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வதாகவும் இதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். __
தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க முடியாது _ Reviewed by NEWMANNAR on September 26, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.