இலத்திரனியல் சாதனங்களை கட்டுப்படுத்தும் புதிய கருவி மன்னார் இளைஞன் கண்டுபிடிப்பு -படங்கள் இணைப்பு

வவுனியா காளிகோவில் வீதியில் அமைந்துள்ள SUNTEC(Sun Technical Engineering College )நடத்திவருபவருமான ,மென்பொருள் பொறியியலாளருமான தங்கராஜா ஷத்விதன் என்பவரே கண்டுபிடித்துள்ளார்.
நிறுவனத்தினால் நாடாத்தப்பட்ட கண்காட்சியின் போது தொலை தூரத்தில் இயங்கக்கூடியதும் சுயமாக செயற்படக்கூடியதும் அத்துடன் கட்டுப்படுத்தக் கூடியதுமான (Robot Technoloy) கொண்ட உபகரணமும் அத்துடன் புதிய இலத்திரனியல் சுற்றை(Circuit) உருவாக்கி அதனை கணினியில் இணைந்து அதற்கான மென் பொருள் நிகழ்ச்சி நிரலையும் உருவாக்கி ( Soft ware and driver) அதனூடாக வீட்டு மின் சுற்றுக்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை கட்டுப் படுத்துவதற்கான தொகையிடும் சுற்றுக்களை ( Integrated Circuit) உருவாக்கி காட்ச்சிப் படுத்தியுள்ளார் இதனுடன் வர்த்தக நிறுவனங்களுக்கு பயன்படும் மென்பொருடகள், இணையம், மல்டி மீடியா வடிவமைப்புக்களும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தன.
இது தொடர்பாக மன்னார் இணையத்துக்கு தெரிவிக்கும் போது
இந்த வீட்டு மின் சுற்றானது தொலை தூரத்திலிருந்து இணையத்தினூடு வீட்டில்நடைபெறுவதைஅவதானிப்பதுடன்மின்னினைப்புக்களை ஏற்படுத்தவும் முடியும் அத்தோடு இது முழுமையாக இலகுவாகவும் மலிவாகவும் கிடைக்கக்கூடிய இலதிதரனியல் பொருட்களைக் கொண்டு எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்றவகையிலும் எல்லோராலும் இத்தொழில்நுட்பத்தினை பெறக்கூடியதாக அமையும் எனவும் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
கணினியின் Mother board , Processor இனைபயன்படுத்தி அவற்றுடன் பொருத்தக் கூடிய தொகையிடும் சுற்றினை ( Integrated Circuit) உருவாக்கி அதனை இணைத்து மென்பொருள் ஒன்றினால் செயற்படுத்தக் கூடிய தன்னியக்கி செயற்பாட்டினையும் (Shelf Brain)அத்தோடு இயக்குனர் (Operator) மூலம் இயக்கக் கூடிய வசதியும்; கொண்ட றோபோ தொழில் நுட்பத்தினை உருவாக்கியுள்ளேன் என்றும் இது அதிகூடிய தகவல் பரிமாற்றத்தினை வேகமாக செயற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது அத்தோடு வீடியோ தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி செயற்பாடு கொண்டது இதற்கு ஒரு குறிப்பிட்ட தூரத்தின் முன் ஒரு பொருளோ அல்லது உருவமோ தென்படுமாயின் சமிக்கைகளை அனுப்பிக்கொண்டே இருக்கும் அதுமட்டும் அல்லாமல் அதன் தூரத்தின் அளவில் தனது செயற்பாட்டின் வேகத்தினை கட்டுப்படுத்த வள்ளது எனவும் இது குறுந்தூரம் நெடுந்தூரம் செல்லக் கூடியதாகவும் இதனூடாக எதிர்காலத்தில் நிலத்திலிருக்கும் கண்ணிவெடிகள் மற்றும் அவதாப்புனிக்களும் தூரத்திலிருந்து இடம்பெறும்; செயற்பாடுகளை அவதானிப்பதற்கும் பயன்படுத்த ஏதுவாக வடிவடிமைக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் 1ம் 2ம் 3ம் திகதி வவுனியா மகாவித்தியாலயத்தில் இடம்பெறும் வர்த்தக கண்காட்சியில் இவை விளக்கப்படும் என தெரிவித்தார்.
ஷத்விதன் அவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கள் வெற்றிபெற எமது மன்னார் இணையம் சார்பாக வாழ்த்துகின்றோம்
இலத்திரனியல் சாதனங்களை கட்டுப்படுத்தும் புதிய கருவி மன்னார் இளைஞன் கண்டுபிடிப்பு -படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
June 30, 2012
Rating:

No comments:
Post a Comment