மகாண கடற்கரை கரப்பாந்தாட்டம் - மன்னார் அணி சம்பியன்
முல்லைத்தீவு கடற்கரையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மாவட்டங்களுக்கிடையேயான கடற்கரை கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் மன்னார் அணி வெற்றி பெற்று வட மாகாண சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது.
இவ் இறுதியாட்டத்தில் யாழ். மாவட்ட அணியுடன் மோதிக்கொண்ட மன்னார் அணி முதல் சுற்றில் 21:18 என்ற புள்ளிகளைப் பெற்று பின்னடைந்திருந்தாலும் அடுத்த இரு சுற்றுகளிலும் முறையே 21:14, 15:4 என்ற புள்ளிகளைப் பெற்று யாழ். ஆணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடிக்கொண்டது. வட மாகாணத்தில் இவ்வகைப் போட்டி முதல் தடவையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மகாண கடற்கரை கரப்பாந்தாட்டம் - மன்னார் அணி சம்பியன்
Reviewed by NEWMANNAR
on
August 17, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment