வவுனியா - மன்னார் வீதியில் முச்சக்கர வண்டி விபத்து!- கைக்குழந்தை உட்பட மூவர் படுகாயம்-பட இணைப்பு.
வவுனியா - மன்னார் வீதியில், குருமன்காட்டுச் சந்திக்கு அருகாமையில் ஜீப் வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி ஆகிய மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீடொன்றின் முன்னால் வீதியில் பயணிக்க தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன், வவுனியாவில் இருந்து குருமன்காட்டுச் சந்தி நோக்கி பயணித்த ஜீப் வாகனம் மோதியதில் முச்சக்கரவண்டியில் அமர்ந்திருந்து இரு பெண்களும், 8 மாத கைக்குழந்தையும் காயமடைந்துள்ளனர்.
இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து பிரதேச மக்கள் முச்சக்கர வண்டியினுள் சிக்குண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து ஜீப் வாகனத்தின் சாரதி வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா - மன்னார் வீதியில் முச்சக்கர வண்டி விபத்து!- கைக்குழந்தை உட்பட மூவர் படுகாயம்-பட இணைப்பு.
Reviewed by NEWMANNAR
on
October 16, 2012
Rating:

No comments:
Post a Comment