அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர மேற்கு பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்.


மன்னார் நகர மேற்கு பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை காலை மன்னார் மீன் சந்தை பகுதியில் இருந்த சிலரால் கடுமையாகத்தாக்கப்பட்ட நிலையில் அவர் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜீ.குனசீலன் தெரிவித்தார்.

மன்னார் நகர மேற்கு பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரிடம் இன்று கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் மீன் சந்தை பகுதியில் கடமையில் இருந்த பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை அப்பகுதியில் இருந்த சிலர் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை மன்னார் பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான   பொது சுகாதார பரிசோதகர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்பு அவர் வீடு திரும்பியுள்ளதாகவும் மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜீ.குனசீலன் மேலும் தெரிவித்தார்
மன்னார் நகர மேற்கு பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல். Reviewed by NEWMANNAR on November 30, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.