அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோர்வே தமிழ்ச்சோலையின் உதவிகள் வழங்கல்!

மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோர்வே ஒஸ்லோவில் உள்ள தமிழ்ச் சோலையின் உதவியுடன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.


 அண்மையில் பெய்த அடைமழைகாரணமாக பாதிக்கப்பட்ட தாயகத்து மக்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களது உதவியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெள்ளநிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது. அதன் ஓா் கட்டாகவே மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.

 இதில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தேசிய அமைப்பளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன் கட்சியின் ஊடக இணைப்பாளர் சத்தியசீலன் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் உபதலைவருமான சிவபாதம் கஜேந்திரகுமார் செயற்குழு உறுப்பினர் கிருஸ்ணகோபால் வசந்தறூபன் மன்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெனடிக்ற் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோர்வே தமிழ்ச்சோலையின் உதவிகள் வழங்கல்! Reviewed by NEWMANNAR on January 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.