ஆஸி. செல்ல முயற்சித்த 28 பேருக்கு விளக்கமறியல்
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லவிருந்த 28 பேரை எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல தயார் நிலையில் இருந்த 28 பேர் வெலிகம - மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுக பகுதியில் வைத்து கடந்த 21 ஆம் திகதி அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே குறித்த நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா பகுதிகளைச் இவர்கள் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுக பகுதி வீடொன்றில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸி. செல்ல முயற்சித்த 28 பேருக்கு விளக்கமறியல்
Reviewed by Admin
on
February 23, 2013
Rating:

No comments:
Post a Comment