உலக வங்கிக் குழுவினர் மாந்தை மேற்குப் பிரதேச சபைக்கு விஜயம் -பட இணைப்பு
கடந்தவியாழன் (21.03.2013) அன்று உலக வங்கிக் குழுவினர் மாந்தை மேற்குப் பிரதேச சபைக்குச் சென்று அங்கு கௌரவ தலைவர் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட உறுபினர்கள், சபையின் செயலாளர் ஊழியர்களை நேரடியாகச் சந்தித்து சபையினால் தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும் 'புறநெகும' வேலைத்திட்ட முன்னேற்றம் தொடர்பாகக் கலந்துரையாடியதுடன் சில வேலைத்திட்டங்கனையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
இவர்களுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், வடமாகாண உள்ளுராட்சித் திணைக்கள அதிகாரிகள், மன்னார் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.Nஐ.துரம், அவர்களது அலுவலக அதிகாரிகள் மற்றும் அவுஸ்ரேலிய நிதி வழங்கும் நிறுவனம்(Aus. Aid) எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த உயரதிகாரிகள் ஏனைய சபைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பாக மாந்தை மேற்குப் பிரதேச சபையின் செயற்பாடு காணப்படுவதாகவும், தொடர்ந்து சிறப்பாகச் செயற்படுவதன் மூலம் அடுத்த வருடமளவில் யுரள யுனை நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ள நிதியினைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏதுவாக உங்களது செயற்பாடு தயாரான நிலையில் இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.
இதற்குசபையின் செயலாளர் நிச்சயம் தற்போதுபோன்று சிறப்பாகச் செயலாற்றுவோம் எனவும் கூறினர்.

உலக வங்கிக் குழுவினர் மாந்தை மேற்குப் பிரதேச சபைக்கு விஜயம் -பட இணைப்பு
Reviewed by Admin
on
March 24, 2013
Rating:
Reviewed by Admin
on
March 24, 2013
Rating:



No comments:
Post a Comment