அண்மைய செய்திகள்

recent
-

1755ஆம் ஆண்டுகால நாணயங்கள், தாழி கண்டுபிடிப்பு

கற்பிட்டி, இலந்தையடி பிரதேசத்தில் 1755ஆம் ஆண்டு மற்றும் 1773ஆம் ஆண்டு ஆகிய காலப்பகுதிக்குரிய புராதன நாணயங்கள் மற்றும் புராதன காலத்தினது என நம்மப்படும் தாழி என்பன பிரதேச மீனவர்களினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


 குறித்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினையடுத்து அங்கு தெரியவந்த சிவப்பு நிறத்திலான வலயத்தினை மீட்க முற்பட்ட போது அது புராதன கால தாழி என தெரியவந்துள்ளது. இதனையடுத்து மீனவர்கள் அதனை மீட்டு மீனவர் ஒருவரின் வீட்டில் வைத்துள்ளார்கள்.

இத்தாழியினை மீட்கும் போது அதனுள்ளிலிருந்து புராதன கால நாணயங்களும் மீனவர்களினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட புராதன பொருட்கள் தொடர்பில் கிராம சேவையாளரூடாக பிரதேச செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.





1755ஆம் ஆண்டுகால நாணயங்கள், தாழி கண்டுபிடிப்பு Reviewed by NEWMANNAR on June 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.