மன்னார் பறப்பாங்கண்டல் றோ.க.த.க.பாடசாலை மைதானத்தில் தேவாலயம் கட்டுவதற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.(படங்கள் )
-சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றினைந்து மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த அவர்களை சந்தித்து முறைப்பாட்டை முன்வைத்தனர்.
இது தொடர்பாக குறித்த கிராம மக்கள் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த அவர்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,,,
தற்போது பறப்பாங்கண்டல் கிராமத்தில் 260 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் 200 குடும்பங்களின் கருத்துகளுக்கு மாறான வகையில் தற்போதைய விளையாட்டு மைதானத்தில் கத்தோழிக்க தேவாலயம் ஒன்று கட்டுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றது.
இது எங்களுக்கு பேரதிர்ச்சியையும்,மாணவர்களின் கல்விச்சரிவையும் ஏற்படுத்தி இருக்கின்றது.இது புனித கார் மேல் மாதா ஆலய சபையின் தன்னிச்சையான முடிவேயாகும்.
இக்காணியில் ஆலயம் அமைக்க வேண்டும் தீர்மானம் எந்த பொதுக்கூட்டத்திலும் தீர்மானிக்கப்படவில்லை.
இவ் ஆலயம் கடந்த கால போர்ச்சூழலினால் சேதமாக்கப்பட்டது.2012 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் நடைபெற்ற ஆலைய சபை பொதுக்கூட்டத்தில் இருந்த இடத்திலேயே இவ் ஆலயம் கட்டுவதெனவும்,குடும்பத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதெனவும் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
-எனவே பெரும்பாலான மக்களுக்கு விருப்பமில்லாத வகையில் இந்த செயல்; இடம் பெற்று வருகின்றது.
எனவே குறித்த ஆலயம் ஏற்கனவே இருநத இடத்தில் கட்டப்பட வேண்டும் எனவும்,பாடசாலை மைதானத்தில் கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடபர்பாக பாடசாலை வளர்ச்சி சமூகம் என்ற பெரில் மகஜர் ஒன்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்துத்தெரிவித்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த,,,
மன்னார் பறப்பாங்கண்டல் றோ.க.த.க.பாடசாலை மைதானத்தில் தேவாலயம் கட்டுவதற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
June 07, 2013
Rating:
No comments:
Post a Comment