படகு மூலம் ஆஸி. வருபவர்களுக்கு குடியுரிமை ஒருபோதும் கிடையாது: அவுஸ்திரேலியா திட்டவட்டம்
இலங்கையிலிருந்து படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலிய எல்லைக்குள் வருகின்ற எவருக்கும் அவுஸ்திரேலிய குடியுரிமை ஒருபோதும் வழங்கப்படமாட்டாது என்பதனை உறுதியாக அறிவிக்கின்றோம். எனவே உயிரை ஆபத்துக்கு உட்படுத்தியும் பணத்தை இழந்தும் சட்டவிரோத படகுப் பயணத்தில் ஈடுபடுவதன் மூலம் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என்பதனை திட்டவட்டமாக அறிவிப்பதாக இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் சொன்யா கொப்பெ தெரிவித்தார்.
மாறாக சட்டவிரோதமாக வருகின்றவர்கள் அகதிகளாக இனம் காணப்பட்டால் அவர்கள் மதிப்பீட்டின் பின்னர் பப்புவா நியுகினியாவுக்கு நிரந்தரமாக அனுப்பப்படுவார்கள். அகதிகளாக இனம்காணப்படாதவர்கள் தாய்நாட்டுக்கு திருப்பியனுப்பப்படுவார்கள். எனவே உயிரை ஆபத்துக்கு உட்படுத்தும் படகுப் பயணத்தில் ஈடுபடவேண்டாம் என்று கோருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
68 பேருடன் மற்றுமொரு படகு சட்டவிரோதமான முறையில் ஆஸி.யின் எல்லையை நேற்றிரவு (நேற்றுமுன்தினம்) அடைந்துள்ளது. அதில் வந்தவர்கள் அகதிகளாக இனம்காணப்பட்டால் நிரந்தமாக பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
சட்டவிரோத படகுப் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியா செல்கின்றவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியாவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டதிட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் சொன்யா கொப்பெ மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் பணிப்பாளர் சு நைட் மற்றும் ஆஸி. குடிவரவு குடியுரிமை திணைக்களத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோஸ் அல்வாஸ் ஆகியோரும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
அவுஸ்திரேலியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் சொன்யா கொப்பெ மேலும் குறிப்பிடுகையில்
இலங்கையிலிருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருகின்றவர்களுக்கு இனிமேல் அவுஸ்திரேலியாவில் குடியமரும் சந்தர்ப்பம் கிடைக்கமாட்டாது என்பதனை திட்டவட்டமாக அறிவிக்கின்றோம். சட்டவிரோதமாக வருகின்றவர்கள் உடனடியாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு அகதிகளாக அடையாளம் காணப்படுகின்றவர்கள் பப்புவா நியுகினியாவுக்கு நிரந்தரமாக அனுப்பப்படுவார்கள். அகதியாக இனம் காணப்படாதவர்கள் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவா ர்கள்.
இதற்கு ஏற்றவகையில் அவுஸ்திரேலியாவின் சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஜூலை மாதம் 19 ஆம் திகதியிலிருந்து புதிய முறைமை அமுலுக்கு வருகின்றது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய அவுஸ்திரேலியாவும் பப்புவா நியுகினியாவும் ஒரு புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. அதாவது வீசா இன்றி சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற அனைவரும் பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அகதிகளாக இனம்காணப்பட்டால் பப்புவா நியுகினியாவில் நிரந்தரமாக குடியேற்றப்படுவார்கள். அகதிகள் அல்லாவிடின் தாய்நாட்டுக்கு திருப்பியனுப்பப்படுவார்கள்.
அவுஸ்திரேலியாவும் பப்புவா நியுகினியாவும் செய்துகொண்டுள்ள புதிய உடன்படிக்கை விடுக்கும் செய்தி மிகவும் தெளிவானது. அதாவது மக்கள் மேற்கொள்ளும் சட்டவிரோதமான படகுப் பயணமானது மிகவும் ஆபத்தானது என்பதுடன் அந்த பயணம் பயனற்றது. எக்காரணம் கொண்டு இவ்வாறு வருகின்றவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என்பதே தெளிவான முறையில் விடுக்கப்படும் செய்தியாகும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பப்படுவார்கள். பப்புவா நியுகினியாவில் உள்ள மனுஸ்தவில் வைத்து இவர்களின் கோரிக்கையை பப்புவா நியுகினியா அதிகாரிகள் பரிசீலனை செய்வார்கள். மேலும் பப்புவா நியுகினியாவில் அகதிகளை தங்கவைக்கும் இடங்களை விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதேவேளை இலங்கையிலிருந்து படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா வருபவர்களின் காரணங்கள் தொடர்பில் ஆஸி. தொடர்ந்தும் விரைவான முறையில் மதிப்பிட்டுவருகின்றது. 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை 1300 பேர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளார்கள். இந்த முறைமைகள் தொடர்ந்தும் பின்பற்றப்படும். பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பப்படும் அதிகூடிய மக்கள் தொகை குறித்து எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
அதாவது படகுகள் மூலம் ஆட்கடத்தல்களை மேற்கொள்பவர்களிடம் உங்கள் பணத்தை இழக்காதீர்கள் என்று கோரிக்கை விடுக்கின்றோம். ஆட்கடத்தல்காரர்களுக்கு வழங்கப்படும் பணம் விரயம் ஆகுவதுடன் உங்கள் உயிரையும் ஆபத்துக்கு உட்படுத்தும் நிலைமையே உருவாகின்றது. இதனை படகுப் பயணங்களை மேற்கொள்ள முயல்வோர் சரிவர புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.
இதேவேளை இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் அவுஸ்திரேலியா வருகின்றவர்களை தடுப்பது தொடர்பில் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்றுகின்றது. இலங்கையின் கடற்படையினர் சிறந்த சேவையை ஆற்றுகின்றனர். அண்மையில் கூட படகு ஒன்று இலங்கை கடற்படையினால் மீட்கப்பட்டிருந்தது. அந்தவகையில் இரண்டு நாடுகளும் சிறந்த முறையில் ஒத்துழைப்புடன் செயற்பட்டுவருகின்றன. தொடர்ந்தும் இவ்வாறு ஒத்துழைப்புடன் செயற்பட்டு இந்த சட்டவிரோத படகுப் பயணத்தை தடுப்போம் என்றார்.
செய்தியாளர் மாநாட்டில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் பணிப்பாளர் சு நைட் குறிப்பிடுகையில்,
சட்டவிரோதப் படகுப் பயணமானது மிகவும் ஆபத்தானது என்பதனை மனதில் கொள்ளுங்கள். இந்த செயற்பாடு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது. இவ்வாறு உயிராபத்து ஏற்படுவதனால் உங்கள் குடும்பத்தினரும் குடும்ப உறவினர்களும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா வந்தால்கூட அங்கு அவர்களுக்கு குடியுரிமை ஒருபோதும் வழங்கப்படமாட்டாது. அண்மையில் கூட அகதிகள் வந்த படகு ஒன்று கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இதில் இலங்கையர்களும் உள்ளடங்குகின்றனர். இதனால் இவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.
68 பேருடன் மற்றுமொரு படகு சட்டவிரோதமான முறையில் ஆஸி.யின் எல்லையை நேற்றிரவு ( நேற்றுமுன்தினம்) அடைந்துள்ளது. அதில் வந்தவர்கள் அகதிகளாக இனம்காணப்பட்டால் நிரந்தமாக பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பப்படுவார்கள். இதில் இலங்கையர்களும் உள்ளடங்குகின்றனர். அகதிகளாக இனம் காணப்படுகின்றவர்கள் பப்புவா நியுகினியாவிலேயே நிரந்தரமாக குடியமர்த்தப்படுவார்கள். இவ்வாறு சட்டவிரோத படகுப் பயணங்கள் குறித்து இதுவரை பத்திரிகை விளம்பரங்களை மேற்கொண்டு வந்தோம். விரைவில் தொலைக்காட்சி விளம்பரங்களையும் செய்யவுள்ளோம் என்றார்.
ஆஸி. குடிவரவு குடியுரிமை திணை க்களத்தின் தெற்காசிய பிராந்திய பணி ப்பாளர் ஜோஸ் அல்வாஸ் கருத்து வெளி யிடுகையில்,
சட்டவிரோதமாக ஆஸி. வருகின் றவர்கள் பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பப்பட்ட பின்னர் அவர்களின் உறவினர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்தாலும் கூட எங்கும் வைத்து இணைந்துகொள்ள முடியாது. அவுஸ்திரேலியாவில் உள்ள குடும்ப உறவினர்கள் பப்புவா நியுகினியாவுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு ஆபத்தான படகுப் பயணத்தை தெரிவு செய்யவேண்டாம் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
மாறாக சட்டவிரோதமாக வருகின்றவர்கள் அகதிகளாக இனம் காணப்பட்டால் அவர்கள் மதிப்பீட்டின் பின்னர் பப்புவா நியுகினியாவுக்கு நிரந்தரமாக அனுப்பப்படுவார்கள். அகதிகளாக இனம்காணப்படாதவர்கள் தாய்நாட்டுக்கு திருப்பியனுப்பப்படுவார்கள். எனவே உயிரை ஆபத்துக்கு உட்படுத்தும் படகுப் பயணத்தில் ஈடுபடவேண்டாம் என்று கோருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
68 பேருடன் மற்றுமொரு படகு சட்டவிரோதமான முறையில் ஆஸி.யின் எல்லையை நேற்றிரவு (நேற்றுமுன்தினம்) அடைந்துள்ளது. அதில் வந்தவர்கள் அகதிகளாக இனம்காணப்பட்டால் நிரந்தமாக பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
சட்டவிரோத படகுப் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியா செல்கின்றவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியாவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டதிட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் சொன்யா கொப்பெ மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் பணிப்பாளர் சு நைட் மற்றும் ஆஸி. குடிவரவு குடியுரிமை திணைக்களத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோஸ் அல்வாஸ் ஆகியோரும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
அவுஸ்திரேலியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் சொன்யா கொப்பெ மேலும் குறிப்பிடுகையில்
இலங்கையிலிருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருகின்றவர்களுக்கு இனிமேல் அவுஸ்திரேலியாவில் குடியமரும் சந்தர்ப்பம் கிடைக்கமாட்டாது என்பதனை திட்டவட்டமாக அறிவிக்கின்றோம். சட்டவிரோதமாக வருகின்றவர்கள் உடனடியாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு அகதிகளாக அடையாளம் காணப்படுகின்றவர்கள் பப்புவா நியுகினியாவுக்கு நிரந்தரமாக அனுப்பப்படுவார்கள். அகதியாக இனம் காணப்படாதவர்கள் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவா ர்கள்.
இதற்கு ஏற்றவகையில் அவுஸ்திரேலியாவின் சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஜூலை மாதம் 19 ஆம் திகதியிலிருந்து புதிய முறைமை அமுலுக்கு வருகின்றது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய அவுஸ்திரேலியாவும் பப்புவா நியுகினியாவும் ஒரு புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. அதாவது வீசா இன்றி சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற அனைவரும் பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அகதிகளாக இனம்காணப்பட்டால் பப்புவா நியுகினியாவில் நிரந்தரமாக குடியேற்றப்படுவார்கள். அகதிகள் அல்லாவிடின் தாய்நாட்டுக்கு திருப்பியனுப்பப்படுவார்கள்.
அவுஸ்திரேலியாவும் பப்புவா நியுகினியாவும் செய்துகொண்டுள்ள புதிய உடன்படிக்கை விடுக்கும் செய்தி மிகவும் தெளிவானது. அதாவது மக்கள் மேற்கொள்ளும் சட்டவிரோதமான படகுப் பயணமானது மிகவும் ஆபத்தானது என்பதுடன் அந்த பயணம் பயனற்றது. எக்காரணம் கொண்டு இவ்வாறு வருகின்றவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என்பதே தெளிவான முறையில் விடுக்கப்படும் செய்தியாகும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பப்படுவார்கள். பப்புவா நியுகினியாவில் உள்ள மனுஸ்தவில் வைத்து இவர்களின் கோரிக்கையை பப்புவா நியுகினியா அதிகாரிகள் பரிசீலனை செய்வார்கள். மேலும் பப்புவா நியுகினியாவில் அகதிகளை தங்கவைக்கும் இடங்களை விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதேவேளை இலங்கையிலிருந்து படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா வருபவர்களின் காரணங்கள் தொடர்பில் ஆஸி. தொடர்ந்தும் விரைவான முறையில் மதிப்பிட்டுவருகின்றது. 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை 1300 பேர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளார்கள். இந்த முறைமைகள் தொடர்ந்தும் பின்பற்றப்படும். பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பப்படும் அதிகூடிய மக்கள் தொகை குறித்து எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
அதாவது படகுகள் மூலம் ஆட்கடத்தல்களை மேற்கொள்பவர்களிடம் உங்கள் பணத்தை இழக்காதீர்கள் என்று கோரிக்கை விடுக்கின்றோம். ஆட்கடத்தல்காரர்களுக்கு வழங்கப்படும் பணம் விரயம் ஆகுவதுடன் உங்கள் உயிரையும் ஆபத்துக்கு உட்படுத்தும் நிலைமையே உருவாகின்றது. இதனை படகுப் பயணங்களை மேற்கொள்ள முயல்வோர் சரிவர புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.
இதேவேளை இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் அவுஸ்திரேலியா வருகின்றவர்களை தடுப்பது தொடர்பில் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்றுகின்றது. இலங்கையின் கடற்படையினர் சிறந்த சேவையை ஆற்றுகின்றனர். அண்மையில் கூட படகு ஒன்று இலங்கை கடற்படையினால் மீட்கப்பட்டிருந்தது. அந்தவகையில் இரண்டு நாடுகளும் சிறந்த முறையில் ஒத்துழைப்புடன் செயற்பட்டுவருகின்றன. தொடர்ந்தும் இவ்வாறு ஒத்துழைப்புடன் செயற்பட்டு இந்த சட்டவிரோத படகுப் பயணத்தை தடுப்போம் என்றார்.
செய்தியாளர் மாநாட்டில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் பணிப்பாளர் சு நைட் குறிப்பிடுகையில்,
சட்டவிரோதப் படகுப் பயணமானது மிகவும் ஆபத்தானது என்பதனை மனதில் கொள்ளுங்கள். இந்த செயற்பாடு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது. இவ்வாறு உயிராபத்து ஏற்படுவதனால் உங்கள் குடும்பத்தினரும் குடும்ப உறவினர்களும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா வந்தால்கூட அங்கு அவர்களுக்கு குடியுரிமை ஒருபோதும் வழங்கப்படமாட்டாது. அண்மையில் கூட அகதிகள் வந்த படகு ஒன்று கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இதில் இலங்கையர்களும் உள்ளடங்குகின்றனர். இதனால் இவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.
68 பேருடன் மற்றுமொரு படகு சட்டவிரோதமான முறையில் ஆஸி.யின் எல்லையை நேற்றிரவு ( நேற்றுமுன்தினம்) அடைந்துள்ளது. அதில் வந்தவர்கள் அகதிகளாக இனம்காணப்பட்டால் நிரந்தமாக பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பப்படுவார்கள். இதில் இலங்கையர்களும் உள்ளடங்குகின்றனர். அகதிகளாக இனம் காணப்படுகின்றவர்கள் பப்புவா நியுகினியாவிலேயே நிரந்தரமாக குடியமர்த்தப்படுவார்கள். இவ்வாறு சட்டவிரோத படகுப் பயணங்கள் குறித்து இதுவரை பத்திரிகை விளம்பரங்களை மேற்கொண்டு வந்தோம். விரைவில் தொலைக்காட்சி விளம்பரங்களையும் செய்யவுள்ளோம் என்றார்.
ஆஸி. குடிவரவு குடியுரிமை திணை க்களத்தின் தெற்காசிய பிராந்திய பணி ப்பாளர் ஜோஸ் அல்வாஸ் கருத்து வெளி யிடுகையில்,
சட்டவிரோதமாக ஆஸி. வருகின் றவர்கள் பப்புவா நியுகினியாவுக்கு அனுப்பப்பட்ட பின்னர் அவர்களின் உறவினர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்தாலும் கூட எங்கும் வைத்து இணைந்துகொள்ள முடியாது. அவுஸ்திரேலியாவில் உள்ள குடும்ப உறவினர்கள் பப்புவா நியுகினியாவுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு ஆபத்தான படகுப் பயணத்தை தெரிவு செய்யவேண்டாம் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
படகு மூலம் ஆஸி. வருபவர்களுக்கு குடியுரிமை ஒருபோதும் கிடையாது: அவுஸ்திரேலியா திட்டவட்டம்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2013
Rating:

No comments:
Post a Comment