மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தினம் அனுஸ்ரிப்பு(Photo&Video)
தமிழ் தேசிய வீரர்கள் தினம் இன்று சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் அனுஸ்ரிக்கப்பட்டது.
-தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
1983 ஆம் ஆண்டு யூலைத்திங்கள் 25,27 ஆகிய தினங்களில் வெலிக்கடை வெஞ்சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் ஸ்தாபக தலைவர் தங்கத்துரை,தளபதி குட்டிமணி உட்பட போராளிகள்,பொதுமக்கள் 53 பேரின் 30 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு குறித்த அஞ்சலி நிழ்வுகள் இடம்பெறது.
-குறித்த அஞ்சலி நிகழ்வில் , இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்,தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் , தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்கரா,கிழக்கு மாகாண சபை உறுப்பினாகளான் கோ.கருனாகரம்,பிரசன்னா இந்திரகுமார் ,டெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சிறிகாந்தா ஆகியோர் கலந்து கொண்டு நினைவுரையாற்றினர்.
இதன் போது பல நூற்றுக்கனக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
(மன்னார் நிருபர்)
(24-07-2013)
மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தினம் அனுஸ்ரிப்பு(Photo&Video)
Reviewed by NEWMANNAR
on
July 27, 2013
Rating:
No comments:
Post a Comment