என்னை பதவி விலகுமாறு கோருவதற்கு அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு உரிமையில்லை; இளங்கக்கோன்
கிராண்ட்பாஸ் ஸ்வர்ன மாவத்தையில் பள்ளிவாசல் மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, காவல்துறை மா அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியூதீன் கோரியிருந்தார்.
எனினும் அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தம்மை நியமித்ததாகவும், தம்மை பதவி விலகுமாறு கோர அமைச்சருக்கு உரிமையில்லை.
குறைந்தளவான அதிகாரத்தைப் பயன்படுத்தி மோதலைக் கட்டுப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு அமையவே காவல்துறையினர் கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது செயற்பட்டதாகவும்.
வெலிவேரியவில் இடம்பெற்றதனைப் போன்ற சம்பவங்கள் இடம்பெற வேண்டும் என அமைச்சர் பதியூதீன் விரும்புகின்றாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னை பதவி விலகுமாறு கோருவதற்கு அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு உரிமையில்லை; இளங்கக்கோன்
Reviewed by Admin
on
August 12, 2013
Rating:

No comments:
Post a Comment