இந்திய மீனவர்கள் 20 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு
நேற்று முன்தினம் சனிக்கிழமை ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 20 பேர் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த நிலையில் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.
பின் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தலைன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 20 மீனவர்களையும் இம்மாதம் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்திய மீனவர்கள் 20 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு
Reviewed by Admin
on
August 05, 2013
Rating:
No comments:
Post a Comment