அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்கள் 20 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

 நேற்று முன்தினம் சனிக்கிழமை ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 20 பேர் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த நிலையில் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.

 பின் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தலைன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

 இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 20 மீனவர்களையும் இம்மாதம் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்திய மீனவர்கள் 20 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு Reviewed by Admin on August 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.