அண்மைய செய்திகள்

recent
-

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2013ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது. இதில் மூன்று இலட்சத்து 29 ஆயிரத்து 725 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார தெரிவித்தார்.

மேலும் இவர்களுக்கென இரண்டாயிரத்து 836 பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 18 ஆயிரம் ஆசிரியர்களும் பரீட்சைக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 பரீட்சை நடைபெறும் வளாகத்திற்குள் பெற்றோர் மற்றும் அனுமதியற்றவர்கள் பிரவேசிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

 இதேவேளை பரீட்சை மோசடிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.


நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை Reviewed by Admin on August 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.