பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் ஏற்பாடுகளை அவதானிப்பதற்காக 15 நாடுகளைச் சேர்ந்த 70 பிரதிநிதிகள் இலங்கை வருகை
பொதுநல வாய மாநாட்டிற்கு கலந்துக் கொள்வதற்காக இலங்கை வரும் பன்னாட்டு தலைவர்களின் பாதுகாப்பு உட்பட ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் மேற்படி குழு கூடிய அவதானம் செலுத்தி செயற்படும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் ???? திகதி வரையில் நடைபெறவுள்ள மேற்படி மாநாட்டின் ஏற்பாட்டு பணிகள் முழுமைக் கண்டுள்ளதா என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் விசேட பேச்சுக்களை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க உள்ளனர்.
இலங்கை வந்தள்ள பொதுநலவாய விசேட கண்காணிப்புக் குழு குறிப்பாக தாமரைத் தடாகம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் பண்டாரநாயக்க விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையம் உட்பட மாநாடுடன் தொடர்புபட்டு இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தும் என்றும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் ஏற்பாடுகளை அவதானிப்பதற்காக 15 நாடுகளைச் சேர்ந்த 70 பிரதிநிதிகள் இலங்கை வருகை
Reviewed by Admin
on
August 17, 2013
Rating:

No comments:
Post a Comment