அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் ஏமாற்றுவித்தை: சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளை­யையும் பொது­ ந­ல­வாய மாநாட்டில் கலந்து கொள்ளும் தலை­வர்­க­ளையும் சர்­வ­தே­சத்­தையும் ஏமாற்­று­வ­தற்­கா­கவே காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஆணைக்­கு­ழு­வினை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.

ஆணைக்­கு­ழு­வா­னது வெறும் ஏமாற்று வித்­தை­யாகும். இதனை ஒரு­வீ­தத்­திற்குக் கூட நம்­ப­மு­டி­யாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

யுத்த காலத்தில் காணாமல் போனோர் மற்றும் கடத்­தப்­பட்டோர் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்­கென மூவர் கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வினை ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்.ஷ நிய­மித்­துள்ளார். இது தொடர்பில் கூட்­ட­மைப்பின் கருத்து குறித்து கேட்­ட­போதே சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன் எம்.பி. மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது:-

யுத்­தத்தின் போதும், அதன் பின்­னரும் காணாமல் போன­வர்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. எதிர்­வரும் 25 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை இலங்கை வரு­கின்றார். நவம்பர் மாதத்தில் பொது­ந­ல­வாய உச்­சி­மா­நாடு இலங்­கையில் நடை­பெ­று­கின்­றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு உலகத் தலை­வர்கள் வருகை தர­வுள்­ளனர். நவ­நீதம் பிள்­ளை­யையும் உலகத் தலை­வர்­க­ளையும் சர்­வ­தே­சத்­தையும் ஏமாற்­று­வ­தற்­கா­கவே காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

நிலைமை இவ்­வாறு இருக்­கையில் அமைச்­ச­ர­வையின் பேச்­சாளர் கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல காணாமல் போனோர் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­களை அர­சாங்கம் முற்­று­மு­ழு­தாக மறுக்­கின்­றது. ஆனாலும் ஒரு சில குழு­வினர் தொடர்ந்தும் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­வ­ரு­வ­தனால் இவ்­வி­டயம் குறித்து ஆராய ஆணைக்­கு­ழு­வினை நிய­மித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

தங்­க­ளு­டைய பெற்­றோர்கள் முன்­னி­லையில் பிள்­ளை­களும் மனை­விமார் முன்­னி­லையில் கண­வன்­மார்­க­ளு­மாக ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்கள் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­தனர். இவ்­வாறு சர­ண­டைந்­த­வர்கள் இன்று காணாமல் போயுள்­ளனர். இவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதே தெரி­யாது உள்­ளது. இத­னை­விட யுத்­தத்தின் போதும் அதன் பின்­னரும் பெரு­ம­ள­வானோர் கடத்­தப்­பட்டு காணாமல் போயுள்­ளனர். இது குறித்­தெல்லாம் தெரி­யாத அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் விதண்­டா­வாதம் பேசு­வது வேடிக்­கை­யாக உள்­ளது.

அர­சாங்­கத்தால் அமைக்­கப்­பட்ட நல்­லி­ணக்க ஆணைக்­குழு முன்­னி­லையில் ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட பெற்­றோர்­களும் மனை­வி­மார்­களும் காணாமல் போன தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு அழுது புலம்பி கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். இக்­கோ­ரிக்­கையை அடுத்து காணாமல் போனோர் தொடர்­பில்­வி­சா­ரணை நடத்­து­மாறு நல்­லி­ணக்க ஆணைக்­குழு தனது அறிக்­கை­யில்­சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது. ஆனாலும் காணாமல் போனோ­ரது உற­வி­னர்­க­ளுக்கு நீதி நியாயம் கிடைக்­கவே இல்லை. இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இது தொடர்பில் இரண்டு தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன. இது தொடர்­பிலும், அர­சாங்கம் இது­வரை நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

இந்த நிலையில் எதிர்­வரும் 25 ஆம் திகதி நவ­நீதம் பிள்ளை இலங்கை வர­வுள்ள நிலையில் -ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. நவ­நீதம் பிள்­ளை­யையும் உலகத் தலை­வர்­க­ளையும் ஏமாற்­றவே அர­சாங்கம் இவ்­வாறு செயற்­பட்­டுள்­ளது. இந்த ஆணைக்­கு­ழு­வினை ஒரு வீதத்­திற்­குக்­கூட நம்­ப­மு­டி­யாது. அர­சாங்­கத்தின் இன்­னொரு ஏமாற்றும் செயற்­பாடு இது­வாகும்.

இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்கள் மற்றும் யுத்­தத்தின் போது காணாமல் போனவர்களை மீட்டுத் தருமாறு போராட்டம் நடத்துவதற்கு காணாமல் போனவர்களை மீட்கும் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் அறியாது அமைச்சரவைப் பேச்சாளர் கருத்துத் தெரிவிப்பது வேடிக்கையான செயற்பாடாகும்.

காணாமல் போனோரது உறவினர்கள் தமது பிள்ளைகளை தேடி வீதி வீதியாக அலைந்து திரிகின்றனர். இந்தநிலையில் ஏமாற்றும் நடவடிக்கையாக அமைக்கப் பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவினை கூட்டமைப்பு ஒரு போதும் ஏற்றுக்கொள் ளப்போவதில்லை.


ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் ஏமாற்றுவித்தை: சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் Reviewed by Admin on August 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.