அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைக்காரியாலயம் இரண்டாவது தடவையாக திறந்து வைப்பு

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட தலைமைக்காரியாலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் உப்புக்குளம் பகுதியில் இரண்டாவது தடவையாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளருமான சுசில் பிரேம ஜெயந்த,கடல் தொழில் பிரதி அமைச்சர் சரத்குமார குனரட்ன,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவர்களுக்காண அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட தலைமைக்காரியாலயம் அண்மையில் மன்னார் பெற்றா பகுதியில் திறந்து வைக்கப்பட்ட நிலையில் அங்கு சிறிது காலம் அரசியல் செயற்பாடுகள் இடம் பெற்று வந்தது.

இந்த நிலையில் நீண்ட காலமாக மூடப்பட்டுக்காணப்பட்ட குறித்த அலுவலகம் புதிய நிர்வாகத்தின் கீழ் நேற்று மீண்டும் இரண்டாவது தடவையாக மன்னார் உப்புக்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மன்னார் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைக்காரியாலயம் இரண்டாவது தடவையாக திறந்து வைப்பு Reviewed by NEWMANNAR on August 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.