காளியம்மன் சிலை உடைப்பு குறித்து இந்து மாமன்றம் கவலை - புத்தி பிறக்க பிரார்த்திக்குமாறும் வேண்டுகோள்
தம்புள்ளை ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் காளியம்மன் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அகில இலங்கை இந்து மாமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திருத்தலத்தில் வணங்கப்பட்டு போற்றப்படும் ஒரு புனிதச் சிலைக்கு தர்மம் போற்றப்படுவதாக சொல்லப்படும் இந்நாட்டில் இப்படிப் படுமோசமான நிகழ்வு நடந்ததையிட்டு இந்த நாட்டு இந்து மக்கள் மட்டுமல்ல ஏனைய மதத்தினரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
இப்புனிதச்சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க அகில இலங்கை இந்து மாமன்றம் ஒழுங்கு செய்யத்தயாராக இருக்கிறது. அதற்கு அரசாங்கத்தின் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.
வெள்ளிக்கிழமை 6-9-2013 காலை 10.34 முதல் 12.54 மணிவரை இராகுகாலம் அந்த வேளையில் அம்மன் எழுந்தருளியிருக்கும் சகல ஆலயங்களிலும் சகல இந்துக்களும் வழிபாட்டில் ஈடுபட்டு இப்படியான அனர்த்தம் இனிமேல் நடக்கக்கூடாது என்றும் இப்படியான அடாவடித்தனம் செய்பவர்களுக்கு புத்தி பிறக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகிறது.
காளியம்மன் சிலை உடைப்பு குறித்து இந்து மாமன்றம் கவலை - புத்தி பிறக்க பிரார்த்திக்குமாறும் வேண்டுகோள்
Reviewed by Admin
on
September 04, 2013
Rating:

No comments:
Post a Comment