யாழில் இராணுவ பிரசன்னம் அதிகரிப்பு தமிழ் மக்களின் இருப்பே கேள்விக்குறி: டி.எம்.சுவாமிநாதன் எம்.பி.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் இராணுவப் பிரசன்னத்தால் இன்னும் ஐந்து வருடங்களில் இம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழ்வதற்குக் கூட இடமில்லாத நிலை ஏற்படலாம். அரசுக்கு எதிராக வாக்களிப்பதன் மூலமே இந்த நிலையிலிருந்து தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என ஐக்கிய தேசிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் மலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இராணுவ ஆக்கிரமிப்புக்களிலிருந்து தமிழ் மக்கள் தங்களையும் தங்கள் நிலங்களையும் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இந்த அரசுக்கு எதிராக வாக்களிப்பதன் மூலமே இது சாத்தியமாகும். இந்த அரசுக்கு வாக்களிப்பதானது தமிழ் மக்கள் தமது தலையில் தாமே மண் போடுவதற்கு ஒப்பானது. தமிழ் மக்கள் தமது நலன் சார்ந்த தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களிப்பதை நாம் தடுக்கவில்லை. ஆனால் அரசாங்கத்திற்கு வாக்களிக்கக்கூடாது.
ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே தமிழர்களுக்கு தீர்வினை வழங்கக்கூடியவர். ஐ.தே.க.வினர் யாழ்ப்பாணத்தில் தாக்குதலுக்குள்ளாகின்றனர். எமது கட்சியின் அலுவலகங்கள் தாக்கப்பபடுகின்றன. எமது முதன்மை வேட்பாளர் துவாரகேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இது தொடர்பாக பல முறை தேர்தல் ஆணையாளருக்கு எமது கட்சியினர் அறிவித்தும் இதுவரையில் எந்தவிதமான பலனும் இல்லை.
தமிழ் மக்கள் ஐ.தே.க.வினரை வெற்றியடையச் செய்யவேண்டும். ஆனால் அரசாங்கத்திற்கு வாக்களிக்கக்கூடாது. அரசாங்கம் வெற்றிபெறும் பட்சத்தில் அதுபெரும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே தேர்தல் தினத்தில் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் மக்கள் தேர்தலில் வாக்களிக்கவேண்டும் என்றார்.
யாழில் இராணுவ பிரசன்னம் அதிகரிப்பு தமிழ் மக்களின் இருப்பே கேள்விக்குறி: டி.எம்.சுவாமிநாதன் எம்.பி.
Reviewed by Admin
on
September 04, 2013
Rating:

No comments:
Post a Comment