அண்மைய செய்திகள்

recent
-

பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் வெளியேற்றப்படுவர்: பந்துல குணவர்த்தன

பகிடி வதையில் ஈடுபடும் கல்வியியற் கல்லூரி மாணவர்களை உடனடியாக கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 
 
கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் போது உடல், உள ரீதியாகவோ அல்லது வேறு எந்தவிதமான முறையிலோ பகிடிவதை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக விசாரணைகள் 
மேற்கொள்ளப்பட்டு அவர்கள் உடனடியாக கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
கல்வியியல் கல்லூரிகள் என்பது சிறந்த ஆசிரியர்களை உருவாக்கும் ஒரு சிறந்த இடம். இது மன நோய்க்காரர்களுக்குரிய இடமல்ல. எதிர்கால சந்ததியினராகிய மாணவர்களுக்காக தெளிவான மன நிலையுடன் சேவையாற்ற வேண்டியவர்களை உருவாக்கும் இடமே கல்வியியற் கல்லூரிகள் என அமைச்சர் தெரிவித்தார்.
 
பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் வெளியேற்றப்படுவர்: பந்துல குணவர்த்தன Reviewed by Admin on September 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.