அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் பொதுநோக்கு மண்டபம் அமைக்க காவல்துறை தடை!

முல்லைத்தீவு–புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் பொதுநோக்கு மண்டபம் அமைக்க காவல்துறையினர் தடைவிதித்துள்ளதுடன் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லுள்ள புதுக்­கு­டி­யி­ருப்பு தேவி­புரம் பகு­தியில் பொது­நோக்கு மண்­டபம் அமைப்­ப­தற்­கென பிர­தேச செய­ல­கத்­தினால் வழங்­கப்­பட்ட காணியில் காவல்துறையினர் உட்­பு­குந்து அடா­வ­டித்­த­னங்­களில் ஈடு­பட்­டுள்­ள­துடன் பொது­மண்­டபம் அமைக்கும் பணி­க­ளையும் தடுத்து நிறுத்தி கிராம அபி­வி­ருத்திச் சங்க நிர்­வா­கத்­தி­ன­ரையும் அச்­சு­றுத்­தி­யுள்­ள­தாக பிர­தேச மக்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர். 

 புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச செயலர் பிரிவின் கீழுள்ள தேவி­புரம் கிராம அலு­வலர் பிரிவில் மக்கள் மீள்­கு­டி­யே­றி­யுள்ள நிலையில் குறித்த கிரா­மத்தின் உட்­கட்­டு­மான வேலைகள் பல்­வேறு அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களால் முன்னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.இந்­நி­லையில் தேவி­புரம் கிரா­மத்தில் யு.என்.கபிராட் நிறு­வ­னத்­தினால் சுமார் இருபத்தி ஐந்து லட்சம் ரூபா செலவில் பொது­நோக்கு மண்­டபம் ஒன்று அமைப்­ப­தற்­கான நிதி கிடைக்கப் பெற்­றுள்ள நிலையில் அதற்­கான காணி­யினை கிராம அபி­வி­ருத்திச் சங்க நிர்­வாகம் பிர­தேச செய­ல­கத்­திடம் கோரி­யி­ருந்­தது. 

 கடந்த 29ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பிர­தேச செயலர் அபி­வி­ருத்திச் சங்­கத்­திற்கு அனுப்­பி­யி­ருந்த கடி­தத்தில் குறித்த காணியில் பொது­நோக்கு மண்­டபம் அமைப்­ப­தற்­கான அனு­ம­தி­யினை வழங்­கி­யுள்ளார்.இத­னை­ய­டுத்து கடந்த 30ஆம் திகதி பிற்­பகல் 4 மணிக்கு பொது­மண்­ட­பத்­துக்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடை­பெற்­றுள்­ளது. 

 இத­னை­ய­றிந்து அன்­றி­ரவு அக்­கா­ணிக்குள் நுழைந்த காவல்துறையினர் அக்­கா­ணிக்குள் இருந்த நிகழ்­வுக்குப் போடப்­பட்­டி­ருந்த தகரக் கொட்­டகை மற்றும் கட்­டடப் பொருட்­களை புதுக்­கு­டி­யி­ருப்பு பொலிஸ் நிலை­யத்­துக்கு ஏற்றிச் சென்­றுள்­ளனர். இத­னை­ய­டுத்து அப்­ப­குதி கிராம அபி­வி­ருத்திச் சங்க நிர்­வா­கத்­தி­ன­ரையும் அச்சுறுத்தி குறித்த காணிக்குள் அபிவிருத்திகள் மேற்கொண்டால் கைது செய்து அடைக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் பொதுநோக்கு மண்டபம் அமைக்க காவல்துறை தடை! Reviewed by Admin on October 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.