மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஜனசெவண உபகார வங்கிக் கடன் உரித்து பத்திரங்கள் வழங்கிவைப்பு-படங்கள்
ஜனசெவண உபகார வங்கிக் கடன் உரித்து பத்திரங்கள் கடன் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மன்னார் பிரதேச செயலக மகாநாட்டு மன்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய கலந்து கொண்டு கடன் பெறும் பயனாளிகளுக்கு கடன் உரித்து பத்திரங்களை வழங்கிவைத்தார்.
இவ் ஆண்டிற்கென மன்னார் மாவட்டத்திற்கு 200 பயநாளிகளுக்கான கடன் உரித்து பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக 45 பயநாளிகளுக்கு கடன் உரித்து பத்திரங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தலா ஓரு வீட்டிற்கு 3 லட்சம் தொடக்கம் 4 லட்சம் வரையிலான கடன்களுக்கான உரித்து பத்திரங்கள் பயநாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் தே.வீ.அ.அ.சபையின் மாவட்ட முகாமையாளா திருமதி.ரு.சுவர்ணராஜா மற்றும் முகாமையாளர், உதவிக்கணக்காளர், கடன் பயனாளிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மாற்றமடையும் நகரங்களின் போக்கு எனும் தெனிப் பொருளில் நடைபெற்ற இந் நிகழ்வில் உலக குடியிருப்பு தினம் 2013 ஜ ஒட்டி நாடு பூராகவும் குடியிருப்பு வார நிகழ்வுகள் நடை பெற்று வருகிறது. குடியிருப்பு வார நிகழ்வுகள் ஒக்டேபர் 1 முதல் 7ம் திகதிவரை மொரட்டுவ சொய்சாபுரத்தில் நாடைபெற்று வருகிறது
ஒக்டோபர் 7ம் திகதி ஜனாதிபதி தலைமையில் உலக குடியிருப்புதின மகாநாடு மு.ப 10 மணிக்கு மொரட்டுவ சொய்சாபுரத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.
லுயிஸ் மார்சல்
மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஜனசெவண உபகார வங்கிக் கடன் உரித்து பத்திரங்கள் வழங்கிவைப்பு-படங்கள்
Reviewed by Admin
on
October 04, 2013
Rating:
No comments:
Post a Comment