அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகள் ஆரம்பம்

வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்டறிய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு தற்பொழுது முறைப்பாடுகளை பெற்று வருகிறது.
விசாரணை ஆணைக்குழுவுக்கு நேற்றைய தினம் வரை 60க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் போனவர்கள் தொட்பில் கண்டறிந்து அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க இலங்கையில் சட்டக்கட்டமைப்பு இருக்கின்றது. அதற்கான சட்டத்தை அமுல்படுத்த திணைக்களமும் உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்வைத்துள்ள யோசனைக்கு அமைய காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிய ஐ.நாவின் விசேட பிரதிநிதிக்கான தேவையில்லை என நினைக்கின்றேன்.

காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றனர் என்றால் அது பற்றி அறிந்து கொள்ளும் தேவை உறவினர்களுக்கு இருக்கின்றது என்பதை நான் அறிவேன். அதனை நிறைவேற்ற நான் கூடியளவான முயற்சிகளை மேற்கொள்வேன்.

காணாமல் போன சம்பவங்களுடன் பாதுகாப்பு தரப்பினருக்கு தொடர்பிருப்பதாக சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்படும்.

அத்துடன் காணாமல் போனவர்கள் பற்றி விசாரித்து அறிந்து அவர்கள் காரணமல் போனமைக்கான காரணம் அதற்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்ற விடயங்களை உள்ளடக்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பரிந்துரை செய்யப்படும் என்றார்.
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகள் ஆரம்பம் Reviewed by Admin on October 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.