அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வறுமை ஒழிப்புக்கான சர்வதேச உணவு தின நிழ்ச்சியும் விழிர்ப்புணர்வுக் கருத்தரங்கும் - படங்கள்

சர்வதேச உணவுத்தினத்தை முன்னிட்டு மன்னார் சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் மன்னாரில் வறுமை ஒழிப்புக்கான மக்கள் பேரணியும்,விழிர்ப்புணர்வு கருத்தரங்கும் இன்று வியாழக்கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது.

 மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது. இன்று காலை 10 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் இருந்து வருமை ஒழிப்புக்கான மக்கள் பேரணி ஆரம்பமாகி மன்னார் நகர சபை மண்டபத்தை வந்தடைந்தது. 

 இதன் போது இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் உற்பட விருந்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மன்னார் நகர சபை மண்டபத்தில் விழிர்ப்புனர்வு கருந்தரங்கு இடம் பெற்றது.

 குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்,மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,மாவட்ட நீர் பாசன பொறியியலாளர் எஸ்.கிருஸ்ன ரூபன்,மன்னார் நகர சபை உறுப்பினர்களான என்.நகுசீன்,ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
















இணைய செய்தியாளர் ,&  லுயிஸ் மார்சல் 


மன்னாரில் வறுமை ஒழிப்புக்கான சர்வதேச உணவு தின நிழ்ச்சியும் விழிர்ப்புணர்வுக் கருத்தரங்கும் - படங்கள் Reviewed by Admin on October 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.