அண்மைய செய்திகள்

recent
-

வியாபாரம் செய்ய அதற்குரிய விசாவுடன் வாருங்கள்! இந்தியர்களுக்கு அறிவுரை

இலங்­கைக்கு எந்த நோக்­கத்­துக்­காக விசா எடுத்து வந்தீர்களோ அந்த நோக்­கத்துடன் செயற்­ப­டுங்கள்´ என உல்­லாசப் பயண விசாவில் இலங்கைக்கு வந்து மன்னாரில் சட்­ட­வி­ரோதமாக துணி வியா­பா­ரத்தில் ஈடு­பட்ட இந்தியப் பிரஜைகளுக்கு மன்னார் நீதவான் ஆனந்தி கன­க­ரட்ணம் அறிவுரை கூறியுள்ளார். 

பண்டிகைக் காலங்களை முன்­னிட்டு, இலங்கை வந்து வியா­பார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்­தியப் பிர­ஜைகள் இருவர் நேற்று (19) மன்னார் நீதி­மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

மன்னார் நீதி­மன்றத்தில் இடம்­பெற்ற இருவேறு வழக்­கு­களில் இரண்டு இந்­தியப் பிர­ஜை­க­ளுக்கு எதி­ரா­கவும், இலங்கையர்கள் இருவருக்கு எதி­ரா­கவும் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்­தனர். 

இதில் இந்­தியர் இருவர் இலங்­கைக்கு உல்­லாசப் பயண விசாவில் வந்து இந்­திய ஆடை அணி­க­லங்­களை சட்­ட­வி­ரோதமாக விற்பனை செய்ததாகவும், ஏனைய இரு இலங்­கை­யர்­களும் இவர்­க­ளுக்கு உறுது­ணை­யாக செயற்பட்­ட­தாகவும் வழக்கு தாக்கல் செய்யப்­பட்­டி­ருந்­தது. 

இதன்போது, "எந்த அடிப்­ப­டை­யி­லான விசாவில் இலங்­கைக்கு வருகின்­றீர்­களோ அதற்­க­மைய செயற்­பட்டால் இங்கு இவ்­வா­றான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டாது. 

ஆகவே வியா­பார நோக்­கோடு இங்கு வர விரும்­பினால் அதற்­கான பய­ணச்­சீட்டோடு வந்து செயற்­ப­டுங்கள் என நீதி­பதி அறி­வுரை வழங்கினார். 

மேலும் அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதால் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டதுடன், ஒவ்வொருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. 
வியாபாரம் செய்ய அதற்குரிய விசாவுடன் வாருங்கள்! இந்தியர்களுக்கு அறிவுரை Reviewed by Author on December 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.