அண்மைய செய்திகள்

recent
-

2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி

தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அந்த மொழியானது அவர்களின் தாய்மொழி அல்லாதவிடத்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் போது மேலதிக புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தினை உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கா கோரியுள்ளார். 


அதாவது, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மாணரொருவர் அவருக்கு இரண்டாம் மொழியான சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றாலோ அல்லது சிங்கள மாணவரொருவர் அவருக்கு இரண்டாம் மொழியான தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றாலோ அதற்காக பல்கலைக்கழக நுழைவின் போது அவர்களுக்கு விசேட புள்ளிகள் வழங்கப்படும். 

இதன் பிரகாரம் சாதாரண தரத்தில் இரண்டாம் மொழிக்கு 'ஏ' தரம் பெற்றால் அதற்காக 5 புள்ளிகள் வழங்கப்படும். அத்துடன், 'பீ' தரத்துக்கு 4 புள்ளிகளும் 'சி' தரத்துக்கு 3 புள்ளிகளும் 'எஸ்' தரத்துக்கு 2 புள்ளிகளும் வழங்கப்படும்.  

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேசியத் திட்டத்தின் கீழ், அரச பல்கலைக்கழகங்களில் மும்மொழிகளிலும் கற்பிக்கப்படும் பாடநெறிகளுடன் இன ரீதியாக கலக்கப்பட்ட மாணவர் சமூகத்தை உறுதிப்படுத்தலுக்கு அமைவாக இந்த அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி Reviewed by Author on January 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.