இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல்எனின் உடன் வைத்தியசாலைக்கு செல்லுங்கள்
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் நோயாளியை சிகிச்சைக்காக அரச வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. காய்ச்சல் வரும்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வலி நிவாரணி மாத்திரைகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக அவ் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் சில நாட்கள் காய்ச்சல் அதிகரிக்கப்பட்டவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் அரச வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல்எனின் உடன் வைத்தியசாலைக்கு செல்லுங்கள்
Reviewed by Author
on
January 15, 2014
Rating:
Reviewed by Author
on
January 15, 2014
Rating:

No comments:
Post a Comment