சிறைச்சாலைகளில் மீட்கப்பட்ட தொலைப்பேசிகளை அழிப்பதற்கு நடவடிக்கை
சிறைச்சாலைக்குள் மீட்கப்பட்ட 4800 கையடக்க தொலைப்பேசிகளை அழிப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சட்ட விரோதமாக சிறைக் கைதிகளால் பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைப்பேசிகளே இவ்வாறு அழிக்கப்படவுள்ளதாக உயர் அதியாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, கைப்பற்றப்பட்டுள்ள கையடக்க தொலைப் பேசிகளின் ஒரு தொகையை மத்திய சுற்றாடல் அதிகார சபையினரிடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைப்பறப்பட்ட கையடக்க தொலைப்பேசிகளை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதி கோரப்பட்ட போதிலும், தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அதற்கான அனுமதியை வழங்க மறுத்துள்ளதாகவும் உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் மீட்கப்பட்ட தொலைப்பேசிகளை அழிப்பதற்கு நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
February 16, 2014
Rating:

No comments:
Post a Comment