கர்ப்பிணியான மனைவியை கொலை செய்தவருக்கு மரண தண்டனை : யாழ் நீதிமன்றம் தீர்ப்பு
மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபணமான ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இன்றய தினம் தீ்ர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இந்த தண்டனையை விதித்து தீர்பளித்துள்ளார்.
9 மாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக நாவற்குழி பகுதியை சேர்ந்த ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணியான மனைவியை கொலை செய்தவருக்கு மரண தண்டனை : யாழ் நீதிமன்றம் தீர்ப்பு
Reviewed by NEWMANNAR
on
March 06, 2014
Rating:

No comments:
Post a Comment