மன்னார் பறப்பாங்கண்டல் சேதமடைந்த கிறிஸ்தவ கோவிலினை புனரமைக்க அமைச்சர் ராஜித சேனாரத்ண நடவடிக்கை-படங்கள்
பறப்பாங்கண்டலில்; சேதமடைந்து காணப்படும் கத்தோலிக்க தேவாலயத்தை புனரமைத்து தருவதாக அமைச்சர் ராஜித சேனாரெத்ண தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் பறப்பாங்கண்டல் பகுதியில் அமைந்திருக்கும் கட்டுக்கரை குளத்திற்கு அருகாமையில் சமூக அடிப்படையிலான மீன் வித்து உற்பத்தி நிலையம் ஒன்று கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்தினவினால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த திறப்புவிழாவில் கலந்து கொண்ட அமைச்சரிடம் குறித்த பகுதி மக்கள் தமது பகுதியில் அமைந்திருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தை புனரமைத்து தரும்படி அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர்.
குறித்த மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அக்கோயிலுக்கு சென்று பார்வையிட்டதுடன் குறித்த கோயிலை புனரமைத்து தருவதாக உறுதியளித்தார்.
இதன் போது சம்பந்தப்பட்ட மக்களிடம் குறித்த கோயிலின் கட்டுமான மதிப்பீட்டினை தரும்படியாக அமைச்சர் கேட்டுக்கொண்டதோடு விரைவில் கட்டுமான மதிப்பீட்டினை வழங்கினால் விரையில் புனரமைப்பு செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டி மெல், நெக்டா நிறுவனத்தின் தேசிய நீர்வள உயிரின அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜெயந்த , பிராந்திய நீர்வள அபிவிருத்தி அதிகாரி நிருபராஜ், மடு பிரதேச செயலாளர் சத்தியசோதி, நீர்பாசன நிறுவனத்தின் பொறியியலாளர், நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் புஸ்பலதா ,மாவட்ட கடற்றொழில் பிரதிப்பணிப்பாளர் மிராண்டா, உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் பறப்பாங்கண்டல் பகுதியில் அமைந்திருக்கும் கட்டுக்கரை குளத்திற்கு அருகாமையில் சமூக அடிப்படையிலான மீன் வித்து உற்பத்தி நிலையம் ஒன்று கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்தினவினால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த திறப்புவிழாவில் கலந்து கொண்ட அமைச்சரிடம் குறித்த பகுதி மக்கள் தமது பகுதியில் அமைந்திருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தை புனரமைத்து தரும்படி அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர்.
குறித்த மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அக்கோயிலுக்கு சென்று பார்வையிட்டதுடன் குறித்த கோயிலை புனரமைத்து தருவதாக உறுதியளித்தார்.
இதன் போது சம்பந்தப்பட்ட மக்களிடம் குறித்த கோயிலின் கட்டுமான மதிப்பீட்டினை தரும்படியாக அமைச்சர் கேட்டுக்கொண்டதோடு விரைவில் கட்டுமான மதிப்பீட்டினை வழங்கினால் விரையில் புனரமைப்பு செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டி மெல், நெக்டா நிறுவனத்தின் தேசிய நீர்வள உயிரின அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜெயந்த , பிராந்திய நீர்வள அபிவிருத்தி அதிகாரி நிருபராஜ், மடு பிரதேச செயலாளர் சத்தியசோதி, நீர்பாசன நிறுவனத்தின் பொறியியலாளர், நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் புஸ்பலதா ,மாவட்ட கடற்றொழில் பிரதிப்பணிப்பாளர் மிராண்டா, உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் பறப்பாங்கண்டல் சேதமடைந்த கிறிஸ்தவ கோவிலினை புனரமைக்க அமைச்சர் ராஜித சேனாரத்ண நடவடிக்கை-படங்கள்
Reviewed by Author
on
March 09, 2014
Rating:

No comments:
Post a Comment