அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சர்வமதத்தலைவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசேட கலந்துரையாடல்- படங்கள்

மன்னார் சமாதானத்திற்கும்,மீள் இணக்கத்திற்குமான வழங்கல்(ஆர்.பி.ஆர்) அமைப்பின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் சர்வமத பேரவை தனது செயற்பாட்டின் ஒரு நிகழ்வாக மதத்தலைவர்களை ஒன்றிணைத்து அவர்கள் மத்தியில் வெளிப்படையான கலந்துரையாடல் ஒன்றை இன்று சனிக்கிழமை (21) காலை மன்னாரில் நடாத்தியுள்ளனர்.

 மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வு மையத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் சமாதானத்திற்கும்,மீள் இணக்கத்திற்குமான வழங்கல்(ஆர்.பி.ஆர்) அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் வி.எஸ்.செல்வாநந்த ராஜன் தலைமையில் இடம் பெற்றது. 

 இதன் போது அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் உட்பட சர்வமதத்தலைவர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,அருட்சகோதரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மன்னார் தீவுப்பகுதியில் உள்ள சர்வமதத்தலைவர்கள் மத்தியில் இடம் பெறும் குறித்த நிகழ்வு சர்வமதத்தலைவர்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்துதல்,நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்,மற்றும் சமூக வளர்ச்சி,மத ஒற்றுமையை மேம்படுத்துதல் தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








மன்னாரில் சர்வமதத்தலைவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசேட கலந்துரையாடல்- படங்கள் Reviewed by NEWMANNAR on June 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.