அண்மைய செய்திகள்

recent
-

மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் ம.ம வித்தியாலயத்தின் மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

மகிந்தோதய வேலைத்திட்டத்தின் கீழ் மன்-எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள 3 மாடி கட்டிடத்தைக்கொண்ட தொழில்நுட்ப பீடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா பாடசாலை அதிபர் முஹமட் ஏ.அஸ்லம் தலைமையில் நேற்று திங்கட்கிழமை(14) வெகு சிறப்பாக நடைபெற்றது. 

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக் கலந்து கொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார். இதன் போது விசேட அதிதிகளாக மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப்பணிப்பாளர் சி.கமலராஜன்,உதவி கல்விப்பணிப்பாளர் பி.அமலதாசன் ஆகியோரும் கலந்து கொண்டு அடிக்கல்வினை நாட்டி வைத்தனர். 

 இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள் ,நலன்விரும்பிகள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



மன்/எருக்கலம்பிட்டி முஸ்லிம் ம.ம வித்தியாலயத்தின் மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா Reviewed by NEWMANNAR on July 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.