பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் நால்வர் கைது
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பானமை பிரதேசத்தில் பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பானமை பிரதேசத்தில் நேற்று டிரக் வண்டியொன்று குடைசாய்ந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வீதி போக்குவரத்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பொலிஸ் உயரதிகாரி ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தாக்குதலுக்குள்ளாகினர்.
காயமடைந்த இருவரும் அம்பாறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இன்று நால்வரை கைதுசெய்த பானமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் நால்வர் கைது
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment