எயார் ஏசியா விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு?
விபத்துக்குள்ளான எயார் ஏசியா கியூ.இஸட்.8501 விமானத்தை ஜாவா கடலில் தேடும் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேசிய சுரபயா நகரிலிருந்து கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி 162 பேருடன் பயணித்த விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியை உள்ளடக்கியுள்ள அதன் வால் பகுதியை கண்டுபிடித்துள்ளதாக நம்புவதாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தோனேசிய கடற்படை கப்பலொன்றால் அந்த விமானத்தின் வால் பகுதி என நம்பப்படும் பகுதி கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மேற்படி விமான கறுப்புப்பெட்டியை கண்டுபிடித்து மீட்கும் முகமாக நீர்மூழ்கிவீரர்கள் ஜாவா கடலின் அடித்தளத்திற்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ளனர்.
எயார் ஏசியா விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு?
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:


No comments:
Post a Comment