தமிழ் மன்னன் இராவணனை பற்றி ஆராயும் அரசு
இலங்கையை தமிழ் அரசன் இராவணன் ஆண்டதற்கான ஆதாரபூர்வமான பல தடயங்கள் இலங்கையில் இருப்பதற்கான பல சான்றுகள் உள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
இந்த மன்னனின் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட ஆலயங்கள், இராமனின் மனைவி சீதா தேவியை கடத்தியதன் புராதன சான்றுகளும் பல இலங்கையில் காணப்படுகின்றன.
இது தொடர்பாக இப்போதைய அரசு ஆராய்ச்சி செய்து அதன் முழு விபரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அறிக்கையை சமர்ப்பிக்க குறைந்தது ஒன்றரை வருடகாலம் செல்லும் எனவும், இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன் இராவணனை பற்றிய பல சான்றுகள் நாட்டில் சகல பகுதிகளிலும் உள்ளதாகவும் அக்குழு தெரிவிக்கின்றது.
தமிழ் மன்னன் இராவணனை பற்றி ஆராயும் அரசு
Reviewed by Author
on
May 25, 2015
Rating:
Reviewed by Author
on
May 25, 2015
Rating:

No comments:
Post a Comment