செல்பிக்கு போட்டியாக எல்பி: தன்னை தானே புகைப்படம் எடுத்த யானை
தாய்லாந்தை சேர்ந்த யானை ஒன்று தன்னை தானே எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கனடாவின் வான்கொவ்வர்(Vancouver) பகுதியில் உள்ள பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவரான கிறிஸ்டியன் லீ ப்ளாங்க்(Christian leBlanc) தனது தேர்வுக்காக தாய்லாந்தின் பேங்காக்கில் தங்கி படித்துவருகிறார்.
இந்நிலையில் இவர் தாய்லாந்தில் உள்ள ஒரு வனவிலங்கு பூங்காவுற்கு சென்றுள்ளார்.
அதற்கு வாழைப்பழம் வாங்கி வந்து அவர் ஊட்டினார்.அப்போது லீ ப்ளாங்கின் கமெராவை யானை எடுத்தது.
அது ஆட்டோமேட்டிக் மோடில் இருந்ததால் தன்னை தானே புகைப்படம் எடுத்துகொண்டது.
யானை எடுத்த இந்த புகைப்படத்தை எல்பி (Elphie) என்ற பெயரில் அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
செல்பிக்கு போட்டியாக எல்பி: தன்னை தானே புகைப்படம் எடுத்த யானை
Reviewed by Author
on
May 24, 2015
Rating:
Reviewed by Author
on
May 24, 2015
Rating:

No comments:
Post a Comment