பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
எதிர்வரும் 13ஆம் திகதிவரை இந்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
ஏற்கனவே பல சுயோட்சை குழுக்கள் பொதுத்தேர்தலுக்காக தமது கட்டுப்பணங்களை செலுத்தியுள்ள நிலையில், பல அரசியல் கட்சிகள் தனித்தும் இன்னும் பல கட்சிகள் பிரதான கட்சிகளுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளன.
இதேவேளை ஒரு கட்சி இன்னும் ஒரு கட்சிக்காக போட்டியிடுவது தடுக்கப்படும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்
Reviewed by NEWMANNAR
on
July 05, 2015
Rating:

No comments:
Post a Comment