பாரம்பரிய மத ரீதியான பிரச்சினைகளை தீர்த்து வைக்க மன்னாரில் சர்வமத தலைவர்களுக்கு விசேட விழிர்ப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.-Photos
யுத்தத்தின் பின் நாட்டில் பாரம்பரிய மத ரீதியான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முகமாக சர்வமதத்தலைவர்களை உள்ளடக்கி சமூக,சமாதான,சமத்துவமான இளம் சமூதாயத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான விழிர்ப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நேற்று சனிக்கிழமை(4) மன்னார் ஆஹாஸ் விடுதியில் இடம் பெற்றது.
பிரித்தானியர் உயர்ஸ்தானிகராலயத்தின் நிதி உதவியுடன் மன்னார் சேவாலங்கா மன்றத்தின் அமுலாக்கத்தின் கீழ் குறித்த நிகழ்ச்சித்திட்டம் இடம் பெற்றது.
குறித்த நிகழ்ச்சித்திட்டத்தில் மன்னார் மற்றும் அனுராதபுரம் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சர்வமதத்தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதன் போது ஜனாதிபதியின் சர்வமத அலோசகர் ஜெகதீஸ் குருக்கள்,சேவாலங்கா மன்றத்தின் உதவித்திட்ட பணிப்பாளர் திருமதி அனட் றொயிஸ்,மாவட்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் குபேரக்குமார் கஸ்மீர் உற்பட சர்வமதத்தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பாரம்பரிய மத ரீதியான பிரச்சினைகளை தீர்த்து வைக்க மன்னாரில் சர்வமத தலைவர்களுக்கு விசேட விழிர்ப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
July 05, 2015
Rating:
No comments:
Post a Comment