அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள் விடுதலை.-Photos


இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவித்தலுக்கு அமைவாக இன்று(10) திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த யூன் மாதம் 2 ஆம் திகதி 3 இலுவைப்படகுகளில் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது குறித்த மீனவவர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த 14 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த 14 இந்திய மீவர்களும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள் விடுதலை.-Photos Reviewed by NEWMANNAR on August 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.