அண்மைய செய்திகள்

recent
-

சிறந்த வீரர்களை அரசு பொறுப்பேற்கும்...


பதக்­கங்கள் வெல்­லக்­கூ­டி­ய வீர வீராங்­க­னை­களை அர­சு­பொ­றுப்­பேற்று அவர்­க­ளுக்குத் தேவை­யான அனைத்தும் செய்து தரப்­படும் என விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.


புதி­தாக பதவியேற்றுள்ள விளை­யாட்டுத் துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர நேற்று விளை­யாட்­டுத்­து­றையின் கீழுள்ள நிறு­வ­னங்­களைப் பார்­வை­யிட்டு அதன் நிலை­மைகள் குறித்து ஆராய்ந்தார்.

அதன்­போது கருத்துத் தெரி­வித்த விளை­யாட்­டுத்­துறை அமைச்சர்,

அடுத்து நடக்­க­வுள்ள ஒலிம்­பிக்கை நோக்­கித்தான் எமது வேலைத்­திட்­டங்கள் அமை­யப்­போ­கின்­றன. அது­மட்­டு­மில்­லாமல் 5 வருட திட்­டத்தை உரு­வாக்கி அதற்­க­மை­யவே விளை­யாட்­டுத்­து­றையின் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

விளையாட்­டுத்­து­றைக்குள் பல பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. அந்தப் பிரச்­சி­னை­களால் நம்­நாட்டில் விளை­யாட்­டுத்­துறை மேம்­ப­டுத்­தப்­ப­டா­மலும் இருக்­கின்­றது. அவற்றைக் கண்டுபிடித்து உடனடியாக தீர்த்துவைப்பதே எனது முதற்கட்டவேலையாக அமையப்போகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சிறந்த வீரர்களை அரசு பொறுப்பேற்கும்... Reviewed by Author on September 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.