சிறந்த வீரர்களை அரசு பொறுப்பேற்கும்...
பதக்கங்கள் வெல்லக்கூடிய வீர வீராங்கனைகளை அரசுபொறுப்பேற்று அவர்களுக்குத் தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
புதிதாக பதவியேற்றுள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று விளையாட்டுத்துறையின் கீழுள்ள நிறுவனங்களைப் பார்வையிட்டு அதன் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார்.
அதன்போது கருத்துத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர்,
அடுத்து நடக்கவுள்ள ஒலிம்பிக்கை நோக்கித்தான் எமது வேலைத்திட்டங்கள் அமையப்போகின்றன. அதுமட்டுமில்லாமல் 5 வருட திட்டத்தை உருவாக்கி அதற்கமையவே விளையாட்டுத்துறையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
விளையாட்டுத்துறைக்குள் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளால் நம்நாட்டில் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படாமலும் இருக்கின்றது. அவற்றைக் கண்டுபிடித்து உடனடியாக தீர்த்துவைப்பதே எனது முதற்கட்டவேலையாக அமையப்போகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சிறந்த வீரர்களை அரசு பொறுப்பேற்கும்...
Reviewed by Author
on
September 09, 2015
Rating:

No comments:
Post a Comment