தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 11 இந்திய மீனவர்கள் கைது-விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு.
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினரினால் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இந்திய மீனவர்கள் 11 பேரூம் 3 படகுகளில் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் கடல் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த 11 இந்திய மீனவர்களையும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் இன்று மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இன்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் பீத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் குறித்த 11 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
(மன்னார் நிருபர்)
(27-10-2015)
குறித்த இந்திய மீனவர்கள் 11 பேரூம் 3 படகுகளில் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் கடல் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த 11 இந்திய மீனவர்களையும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் இன்று மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இன்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் பீத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் குறித்த 11 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
(மன்னார் நிருபர்)
(27-10-2015)
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 11 இந்திய மீனவர்கள் கைது-விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
October 28, 2015
Rating:
No comments:
Post a Comment